முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்

by Column Editor

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார்.

இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றி உள்ளார். ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர்.

கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்வர் பணியேற்ற இவர் நவம்பர் 24, 2010 அன்று சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார்.

கடந்த 2011-2016 ஆண்டுகளில் தமிழகஆளுநராக பொறுப்பு வகித்தார். இவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

இந்நிலையில் தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோசய்யா இன்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

ரோசய்யா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment