மனைவி திருமணத்திற்கு வந்த கணவன் முத்துராசு… விறுவிறுப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2!

by Column Editor

முத்துராசுவை யார் சுட்டுக் கொன்றார்கள் என்ற வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி கார்த்திக், நாளடைவில் ஐஸ்வர்யாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

விஜய் டிவி-யின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஐஸ்வர்யா மறுமணத்தின் போது, இறந்ததாக நம்பப்பட்ட அவரது முன்னாள் கணவர் முத்துராசு எண்ட்ரி கொடுத்து விறுவிறுப்பை கூட்டியுள்ளார்.

விஜய் டிவி-யில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில், ரக்‌ஷா ஹொல்லா, ராஷ்மி ஜெயராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் முதல் பாகம் நிறுத்தப்பட்டு, இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் மிர்ச்சி செந்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா மகாலட்சுமி நடித்து வந்தார். பின்னர் அவர் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மோனிஷா நடித்து வருகிறார்.

மாயனின் தங்கைகளில் ஒருவரான ஐஸ்வர்யாவுக்கும், அவரது அத்தை மகன் முத்துராசுவுக்கும் திருமணம் நடைப்பெறுகிறது. புகுந்த வீட்டிலும், கணவனிடமும் நிறைய கொடுமைகளை அனுபவித்த ஐஸ்வர்யாவுக்கு, ஒருநாள் முத்துராசு இறந்த விஷயம் அதிர்ச்சியை தருகிறது. அவனை யார் சுட்டுக் கொன்றார்கள் என்ற வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி கார்த்திக், நாளடைவில் ஐஸ்வர்யாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

விஷயத்தை தெரிந்துக் கொண்ட மாயனும், தனது தங்கைக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் நோக்கில் திருமணம் நடத்தி வைக்க முயற்சி செய்கிறான். இது முத்துராசுவின் அம்மாவுக்கும், மாமாவுக்கும் கோபத்தைத் தர, கார்த்திக்கின் பெற்றோரிடம் உண்மையைக் கூறி திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டுகிறார்கள்.

விஷயத்தை தெரிந்துக் கொண்ட மாயனும், தனது தங்கைக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் நோக்கில் திருமணம் நடத்தி வைக்க முயற்சி செய்கிறான். இது முத்துராசுவின் அம்மாவுக்கும், மாமாவுக்கும் கோபத்தைத் தர, கார்த்திக்கின் பெற்றோரிடம் உண்மையைக் கூறி திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டுகிறார்கள்.

இப்படி வடிவு, மாசாணியின் சூழ்ச்சிகளை முறியடித்து ஒருவழியாக ஐஸ்வர்யா – கார்த்திக் திருமணம் மேடை வரை வந்திருக்க, திருமண நேரத்தில் எல்லாத்தையும் கூப்பிட்டீங்களே முக்கியமான ஒரு ஆள மறந்துட்டீங்களே என இறந்ததாக காட்டப்பட்ட முத்துராசுவை அழைத்து வருகிறான் மாறன். இதனால் எல்லாரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

கார்த்திக் – ஐஸ்வர்யா திருமணம் நடக்குமா? அப்படியே நடந்தாலும் முத்துராசுவின் தொல்லைகளை மீறி அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment