பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்…. சென்செக்ஸ் 936 புள்ளிகள் உயர்ந்தது….

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 936 புள்ளிகள் உயர்ந்தது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை, சர்வதேச சந்தையில், உலோகம் மற்றும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவது மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது போன்றவை இன்று இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் சன் பார்மா உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,745 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,726 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 141 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.254.26 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.44 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 935.72 புள்ளிகள் உயர்ந்து 56,486.02 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 240.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,871.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment