மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..

by Editor News

ஆபரணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வந்தது. ஆனால் இன்று சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,630 ஆகவும் சவரன், ரூ.53,040 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, 6,645 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்து, 53 ஆயிரத்து 160 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த மாதங்களில் 50 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது 55 ஆயிரத்தை நெருங்கி செல்வது பாமர மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.. கிராமுக்கு ரூ.95.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.95,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Related Posts

Leave a Comment