தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்ந்தது..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி. மற்றும் எல் அண்ட் டி உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,116 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,161 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 121 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.23 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.02 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

குறியீட்டு எண் சென்செக்ஸ் 157.45 புள்ளிகள் உயர்ந்து 58,807.13 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 47.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,516.85 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment