மீண்டும் ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள் …

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 556 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பெடரல் வங்கி எதிர்பார்த்த மாதிரியே வட்டி விகிதத்தை உயர்த்தியது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் எச்.டி.எஃப்.சி. உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. எல் அண்ட் டி பங்கின் விலையில் மாற்றம் இல்லை. இண்டஸ்இந்த் வங்கி மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,244 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,280 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 116 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.275.16 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 555.95 புள்ளிகள் உயர்ந்து 61,749.25 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 165.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,255.80 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment