திறக்கப்படுமா பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை? மூர்த்தி எடுக்கும் அதிரடி முடிவு!

by Column Editor

பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் கடையை திறக்க போராட்டம் செய்து வருகின்றனர்.

புதிய கடையை இடிக்க போவதாக அதிகாரிகள் கூறிவிட்டதால் மூர்த்தி குடும்பம் நியாயம் கேட்டு, போராட்டத்தில் குதித்துள்ளனர்

மூர்த்தி கட்டி இருக்கும் புது கடையை திறக்க விடாமல் மேலதிகாரி ஒருவர் பிரச்சனை செய்து வருகிறார். அவர் தனிப்பட்ட பகையால் இப்படி நடந்து கொள்கிறார் என்பது மூர்த்தி குடும்பத்துக்கு தெரிந்து விட்டது. அதாவது கண்ணன், கதிர் மீது இருக்கும் கோபத்தில் அவர்களை பழி வாங்க இப்படி நடந்து கொள்கிறார் என்ற உண்மையை ஐஸ்வர்யா மொத்த குடும்பத்திடமும் சொல்லி விட்டார். ஒருபக்கம் ஜீவா, கதிர், கண்ணன் இந்த பிரச்சனைக்கு விடை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில், மூர்த்தி தர்ணாவில் ஈடுப்பட முடிவு எடுத்து விட்டார்.

இன்றைய எபிசோடில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மூர்த்தி நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பரப்பட்டன. அதாவது, மேலதிகாரியிடம் இருந்து முறையான பதில் கிடைக்காததால் மூர்த்தி ரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்கிறார். இதை கேள்விப்பட்டு அவருடன் வந்து தனமும் போராட்டம் செய்கிறார். இதைப்பார்த்து ஜீவா, கண்ணன், கதிருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கடைக்கு ஒரு முடிவு தெரியும் வரை இந்த போராட்டத்தில் இருந்து எழுந்துக்க போவதில்லை என்கிறார் மூர்த்தி. அதே நேரம் இந்த விஷயம் மீனா அப்பாவுக்கு தெரிய வர உடனே அவர் மீனாவை எச்சரிக்கை செய்கிறார். அதாவது நமது குடும்ப மானம் முக்கியம் நீ இந்த போராட்டத்திற்கு செல்ல கூடாது என்கிறார். அதே நேரம் இந்த விஷயத்தில் எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது என கை விரிக்கிறார். கடையை சொன்ன தேதியில் திறக்க முடியாது, அதனால் சொந்தக்காரர்களுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்ல சொல்கிறார். இதனால் மீனாவுக்கும் , ஐஸ்வர்யாவுக்கும் கோபம் வருகிறார்.

பச்சிளம் குழந்தையுடன் தனம், மூர்த்தி, தம்பிகள் செய்யும் போராட்டம் பலரின் கவனத்தை பெறுகிறார். பொதுமக்கள் எல்லோருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கின்றனர். இதனால் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. மீடியா, போலீஸ் என கூட்டம் திரள தொடங்குகிறது.

அதுமட்டுமில்லை, இரவு நேரம் ஆகியும் யாரும் வீடு திரும்பாததால் ஐஸ்வர்யாவும், முல்லையும் நகராட்சி அலுவலகத்திற்கு வர, அங்கு மூர்த்தி, தனம் படும் கஷ்டத்தை பார்த்து அவர்களும் தர்ணாவில் கலந்து கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் மீனாவும் கயல் பாப்பாவுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார். மொத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் கடையை திறக்க போராட்டம் செய்து வருகின்றனர். வெற்றி யாருக்கு? புதுக்கடை திறக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கு இன்னும் சில நாட்களில் விடை கிடைத்துவிடும்.

Related Posts

Leave a Comment