மாப்பிள்ளை கோலத்தில் கோபி.. பாக்கியலட்சுமி குடும்பத்திற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

by Column Editor

கோபி ராதிகா திருமண எபிசோடுகள் ஒளிப்பரப்படும் என தெரியப்படுகிறது. ஒருவேளை இது ராதிகாவின் கனவாக இருக்க கூட வாய்ப்புள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறார். கோபி மாட்டுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் தற்போது கோபி மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்படி என்றால் கோபிக்கு கூடிய விரைவில் ராதிகாவுடன் திருமணம் நடைப்பெறவுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்படும் ஹிட் சீரியல்களில் பாக்கியலட்சுமியும் ஒன்று. திருமணத்திற்கு பிறகு குடும்பத்திற்காக மட்டும் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் இல்லத்தரசியின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதிலும், மனைவியை கொஞ்சம் கூட மதிக்காத கணவர் கோபி, குடும்பத்திற்கு தெரியாமல் தனது பழைய காதலியுடன் மிகவும் நெருங்கி பழகி வருவது போன்ற கதைக்களத்தால் சீரியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில், சமீப காலமாக பாக்கியாவின் கணவர் கோபி மற்றும் அவரதுதோழி ராதிகாவின் உறவினை மையமாக கொண்டு காட்சிகளை வடிவமைத்து வருகிறது சீரியல் குழு.

கோபி பற்றிய உண்மை, அவரின் அப்பாவுக்கு தெரிந்து விட்டது. ஏற்கெனவே ஒருமுறை கோபியை அழைத்து வார்னிங் கொடுத்தார். ஆனால் கோபி அதை மதிப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் கோபி – ராதிகா திருமணத்தை பற்றி, மயூ வீட்டுக்கு வந்து சொல்ல, எரிமலையாய் வெடித்தார் கோபியின் அப்பா. இந்த கோபத்துடன் தனது மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர் திடீரென்று தவறி விழுந்து இப்போது முடக்குவாதத்தால் பேச முடியாத நிலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், கோபிக்கும் அந்த குற்றணர்வு வந்து விட்டது. ஆனாலும் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இந்த நேரத்தில் தான் ராதிகாவுக்கு சட்டப்படி விவாகரத்து கிடைத்து விட்டது. அடுத்தது என்ன திருமணம் தான் என்று சந்தோஷத்தில் இருக்கிறார் ராதிகா. இந்த விஷயத்தை கோபியிடமும் சொல்லி விட்டார். கோபிக்கும் விவாகரத்து கிடைத்த உடனே கல்யாணம் என தனது அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கோபி – ராதிகா திருமணம் நடைப்பெற கூடாது, கோபி பாக்கியாவிடம் மாட்ட வேண்டும் என ரசிகர்கள் ஒருபக்கம் கத்தி கொண்டிருக்க, கோபி மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அப்படி என்றால் இன்னும் சில நாட்களில் கோபி ராதிகா திருமண எபிசோடுகள் ஒளிபரப்பப்படும் என தெரியப்படுகிறது. ஒருவேளை இது ராதிகாவின் கனவாக இருக்க கூட வாய்ப்புள்ளது. உண்மை என்ன என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

Related Posts

Leave a Comment