கார்த்திக் பேச்சை கேட்காமல் செம்ம நோஸ்கட் வாங்கிய ரம்யா!

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி தீபாவை கூப்பிட்டு நீ ஒரு பாட்டு பாடு, நீ பாடி நான் கேட்டதே இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, தீபா ஒரு பாடலை பாடி முடிக்க, அபிராமி அதை கேட்டு ரசித்து பாராட்டுகிறாள், பிறகு உனக்காக ஒரு விஷயம் பண்ண போறேன் என்று சொல்லி கொண்டிருக்க, வீட்டிற்குள் ஜோசியர் என்ட்ரி கொடுக்கிறார். அபிராமி ஜோசியரை வரவேற்று உட்கார வைக்கிறாள்.

அதன் பிறகு கார்த்திக்கும் தீபாவுக்கும் கல்யாணமாகி ரொம்ப நாள் ஆகுது, ஆனால் இன்னும் நடக்க வேண்டியது எதுவும் நடக்கல என்று சொல்லி சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்து தர சொல்ல, அதை கேட்டு தீபா எமோஷனாகிறாள். மீனாட்சியும் மைதிலியும் முருங்கை காயாக சமைத்து நினைத்ததை சாதிச்சிட்ட போல என்று கலாய்க்கின்றனர். தீபா நான் இதையெல்லாம் நினைச்சு சமைக்கல என்று சொல்லியும் அவளை கலாய்த்து எடுக்கின்றனர். அதன் பிறகு ஜோசியர் நாள் குறித்து தர மீனாட்சி இன்னைக்கு ஒரு நாள் நான் வீட்டுக்குள் வரேன், தீபாவோட ரூமை நான் அலங்காரம் செய்கிறேன் என்று சொல்கிறாள்.

மறுபக்கம் ரம்யாவும் கம்பெனியின் மாணிக்கம் கார்த்தியிடம் இன்னைக்கு ஒரு புது மிஷின் வருது, அதை இன்ஸ்டால் பண்ண போறாங்க, எப்படி பண்றாங்கனு பார்த்து கத்துக்க என்று சொல்கிறார். மிஷினை இன்ஸ்டால் செய்யும் போது கார்த்திக் இதை இப்படி பண்ண கூடாது, அப்படி பண்ணா மிஷின் பத்திக்கிட்டு எரியும் என்று சொல்ல, எல்லாரும் ஷாக்காக ரம்யா கீழே இறங்கி வருகிறாள், நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு. இத்தனை வருஷமாக இவங்க எல்லாம் வேலை செய்யுறாங்க என்று சொல்லி கோபப்பட கார்த்திக் அமைதியாகி விடுகிறான்.

கொஞ்ச நேரத்தில் அவன் சொன்னபடியே மிஷின் தீ பிடித்து எறிகிறது. இதனால் ரம்யா கோபமாகி கேபினுக்கு சென்று விடுகிறாள், கார்த்திக்கை கூப்பிட்டு இந்த முறை நீ சொன்ன மாதிரி நடந்து விட்டது என்பதற்காக மத்த விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைகிற வேலையை வச்சுக்காமல் உன்னுடைய வேலையை ஒழுங்கா பாரு என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறாள். வீட்டில் மீனாட்சியும் மைதிலியும் தீபாவை கலாய்த்தபடியே ரூமை தயார் செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment