குணசேகரன் கஸ்டடியில் ஜனனி குடும்பம்.. எச்சரித்த சக்தி: கதிரின் அதிரடி பிளான்.!

by Lifestyle Editor

எதிர்நீச்சல் சீரியல் நாடகத்தில் தனது அம்மா, தங்கச்சி காணாமல் போன நிலையில், போலீசில் புகார் கொடுக்க வருகிறாள் ஜனனி. அப்போது அவளை வீட்டில் போய் பரிசோதனை பண்ணலாம் என சொல்லி அழைத்து செல்கின்றனர். சக்தியை தனியாக பைக்கில் வர கூறுகின்றனர். அவனும் பின்னாடி பைக்கை எடுத்துக்கொண்டு வர்ற, வழியில் வண்டி நின்று விடுகிறது.

இதனால் அவன் ஜனனியின் பின்தொடர முடியாமல் போகிறது. இதனிடையில் ஈஸ்வரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்ற, அங்கு ஜீவானந்தமின் பொண்ணும் பர்ஹானாவும் வருகின்றனர். அப்போது ஜீவானந்தம் பொண்ணு ஈஸ்வரியை கட்டுப்பிடித்து அழுகிறாள். அப்பாவுக்கு என்னாச்சுன்னு தெரியலை. அவரை காணோம். எப்படியாவது கண்டுபிடிக்கணும். ஆனால் போலீஸ்ல புகார் கொடுக்க வேணாம்ன்னு எல்லாரும் சொல்றாங்க.

நீங்கதான் போலீஸ் கிட்ட பேசி, அப்பாவை கண்டுபிடிக்க சொல்லணும் என்கிறாள். அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது கொற்றவை அங்கு வருகிறாள். அவளிடம் ஈஸ்வரி பேசுகிறாள். கொற்றவையும் தர்ஷினி கேஸ்ல ஒரு ஐபிஎஸ் போலீசா மட்டும் யோசிச்சுட்டேன். தர்ஷினியை கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் தான் உங்களை பத்தியும், ஜீவானந்தம் பற்றியும் நெறைய தெரிஞ்சுக்கிட்டேன் என சொல்லி சாரி கேட்கிறாள்.

உடனே ஈஸ்வரி எப்படியாவது நீங்க தான் ஜீவானந்தமை கண்டுபிடிச்சு தரணும். அதோட தர்ஷினி நிச்சயதார்த்தம் நட்க்கமாலும் பார்த்துக்கணும் எனவும் கேட்கிறாள். அதற்கு கொற்றவை தர்ஷினி விஷயத்தை கோர்ட் மூலமா தான் நம்மால சரி பண்ண முடியும். ஜீவானந்தமை கண்டுபிடிக்க நானும் முயற்சி பண்றேன் என்கிறாள். அதனை தொடர்ந்து பர்ஹானாவிடம் நானே ஜீவானந்தம் பொண்ணை கூட்டிட்டு போறேன் என்கிறாள் ஈஸ்வரி.

இதனிடையில் ஜனனியை அழைத்து போன போலீஸ் திரும்பி வந்து விட, அவளை மட்டும் காணவில்லை. பார்வதி வீட்டிலே அவளை விட்டு விட்டதாக போலீஸ் சொல்கின்றனர். சரியென சக்தி அங்கு போய் பார்க்கும் போது சிலர் அவளை கடத்தி சென்று விட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைகிறான் சக்தி.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோவில் சக்தி ஆவேசமாக வீட்டுக்கு வந்து மரியாதையாய் என் பொண்டாட்டியையும், அவள் குடும்பத்தையும் விட சொல்லு என கேட்கிறான். அதற்கு குணசேகரன் வாயை மூடுடா. அப்பறம் தம்பின்னு கூட பார்க்க மாட்டேன் என்கிறான். அதனை தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தி போன் பண்ணி, இனிமே ஜனனி அவளோட அம்மா தங்கச்சி வரவே முடியாது என உமையாளிடம் சொல்கிறான்.

இதனிடையில் கதிர் அவுங்களை இப்போ அலறிட்டு ஜனனியையும், எல்லாரையும் கொண்டு வந்து நம்மக்கிட்ட விட்டுவாங்க பாரு. அப்படி ஒரு வேலையை பார்த்து வைச்சுருக்கேன் என சக்தியிடம் சொல்கிறான். இந்த பரபரப்பான காட்சிகளுடன் ப்ரோமோ வீடியோ நிறைவடைந்துள்ளது.

Related Posts

Leave a Comment