தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

by Lifestyle Editor

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு 2018 ஜனவரியில் ‘தேர்தல் பத்திரம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சட்டத்திற்கு புறம்பானவை. நன்கொடை வழங்குவது என்பது அரசியல் கட்சியிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்வது தற்போதுள்ள சட்டங்கள், தேர்தல் நிதியை கார்ப்பரேட், தனி நபர்கள் மூலம் பெற வழிவகுக்கிறது என்று தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts

Leave a Comment