Top 10 TRP : டாப் 10 இடங்களை கை பற்றிய சீரியல்கள்..

by Lifestyle Editor

இந்த வருடத்தின் 50-ஆவது வாரத்தில், TRP லிஸ்டில் டாப் 10 இடங்களை கை பற்றிய சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து, இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த வாரம், கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ள ‘சிங்க பெண்ணே’ சீரியல் தான் இந்த வாரமும் 11.59 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. அண்ணனின் துரோகத்தால், அக்காவின் திருமணம் நின்று போக… தன்னுடைய சகோதரியை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும் என்கிற பொறுப்போடு சென்னைக்கு வந்து கஷ்டப்படும் ஆனந்தி என்கிற பெண்ணை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில், 11.55 TRP புள்ளிகளும் ‘கயல்’ சீரியல் உள்ளது. தன்னுடைய தங்கையின் வளைகாப்பை பல பிரச்சனைகளுக்கு நடுவே செய்து முடித்துள்ள கயல்… அடுத்து தன்னுடைய தம்பியின் காதல் பிரச்னையை சமாளித்து எப்படி மூர்த்தியை வெளியே கொண்டு வருவார் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம் 10.04 TRP புள்ளிகளுடன் சுந்தரி சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தனக்கு எதிராக வரும் பிரச்சனைகளை சுந்தரி எப்படி முறியடிக்கிறார்? கார்த்தி பற்றிய உண்மை தெரியவருமா? விஜய்யை சுந்தரி திருமணம் செய்வாரா? என பல கேள்விகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ‘எதிர்நீச்சல்’ தொடர். மாரி முத்து இறந்து பின்னர்… இந்த சீரியலுக்கு இருந்த மவுசு குறைந்ததோடு, கொஞ்சம் போரின் காட்சிகளுடன் இந்த சீரியல் செல்வது தான் இந்த பின்னடைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த வாரம் டாப் 3 பட்டியலில் இடம்பெறும்… வானத்தை போல சீரியல் 9.42 TRP புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. துளசி மற்றும் பொன்னிக்கு இடையே நடக்கும் தேர்தல் மோதலால், வழக்கமான பரபரப்பும்… ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாசமலர் காட்சிகளுடன் மிஸ் ஆவது தான் TRP-யில் பின்தங்க காரணம் என தெரிகிறது.

மேலும் இந்த வருடத்தின் 50-ஆவது வாரத்தில்… இனியா தொடர் 8.20 TRP புள்ளிகளுடன், 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது. தன்னுடைய கணவரை மெல்ல மெல்ல மாற்றியதோடு தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ தொடங்கியுள்ளார். எனினும் மாமனார் சதியில் இருந்து எப்படி தன்னை இனியா காப்பாற்றி கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்ந்து டாப் 6-TRP ரேட்டிங்கை சன் டிவி தொடர்கள் தக்கவைத்து கொண்டுள்ள நிலையில், 7-ஆவது இடத்தை,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ தொடர் பெற்றுள்ளது. மீனா தனக்கு நடக்கும் அநியாயத்தை தைரியமாக கேட்க துணிந்துள்ள நிலையில், விஜயா அவரை வெளியேற்ற நினைக்கிறார். எனவே… முத்து – மீனா வெளியேறினால் இன்னும் சீரியல் சூடு பிடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த தொடர் இந்த வாரம் 7.72 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.

8-ஆவது இடத்தில், சன் டிவி தொடரான ‘ஆனந்த ராகம்’ சீரியல் உள்ளது. கிரிஜா, ஈஸ்வரிக்கு எதிராக பல பயங்கரமான வேலைகளை செய்ய, அனைத்தையும் முறியடித்து ஈஸ்வரி IPS அதிகாரியாக மாறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த தொடர்ந்து இந்த வாரம் 7.45 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து இந்த வாரம், 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது ‘பாக்கிய லட்சுமி’ சீரியல். பரபரப்புக்கும், சுவாரஸ்யத்திற்கும் குறைவில்லாமல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தாலும், TRP-யில் முன்பை விட இத்தொடர் பின் தங்கியுள்ளது. இந்த வாரம் 7.22 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.

டாப் 10 TRP பட்டியலில், கடைசி இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடர்… மஹாலட்சுமி தன்னுடைய மாமியார் மனதை மாற்றி, சூர்யாவுடன் சேர்ந்து வாழ்வாரா? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் TRP-யில் 6.88 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment