நடக்கமுடியாமல் காயங்களுடன் வந்த நந்தினி… துடிதுடித்துப் போன கதிர்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர்.

குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

தற்போது அந்த டிஆர்பி-யை கதிரை வைத்து பிரபல ரிவி அடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கதிர் தனது அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளார்.

கதிர் மட்டுமின்றி ஞானமும் குணசேகரனை எதிர்த்து நிற்கும் நிலையில், வீட்டில் உள்ள பெண்கள் குணசேகரன் சதியால் காவல்நிலையத்தில் இருக்கின்றனர்.

ஒருவழியாக காவல்நிலையத்திற்கு வந்த கதிர் ஞானம் அங்கு நந்தினியின் நிலையினைக் கண்டு துடிதுடித்துப் போயுள்ளார்.

குணசேகரன் நந்தினியை பொலிசாரை வைத்து பழி தீர்த்துள்ளது பார்வையாளர்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனாலும் மற்றொரு புறம் கதிர் நந்தினிக்காக வந்து நிற்கும் காட்சி குறித்த சீரியலை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது.

Related Posts

Leave a Comment