குழந்தைகளை எளிதில் தூங்க வைப்பது எப்படி?

by Column Editor

குழந்தையை தூங்க வைப்பது என்பது தாய்மார்களுக்கு ஒரு பெரிய சவால் என்ற நிலையில் குழந்தையை எளிதில் தூங்க வைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
குழந்தைகளை தாலாட்டு பாடல் பாடி மிக எளிதில் தூங்கி வைக்கலாம். தாலாட்டு பாடல் தெரியாத தாய்மார்கள் தாலாட்டு பாடல்களை போனில் பாட விட்டு தூங்க வைக்கலாம்.

குழந்தைகள் நீரின் சத்தம் கேட்டால் அமைதியாகிவிடும். எனவே மொபைல் போனில் நீரின் சத்தத்தை பிளே செய்தால் குழந்தைகள் அதைக் கேட்டவுடன் சீக்கிரம் தூங்கிவிடும்.

குழந்தையை தூங்க வைக்கும்போது விளக்கை அணைத்து விட வேண்டும். சிறிதளவு வெளிச்சம் இருந்தால் போதும்.

குழந்தைகள் தூங்கவில்லை என்றால் அதன் தலையை லேசாக தடவி கொடுக்கலாம். அதேபோல் நெற்றியிலும் முதுகிலும் லேசாக தடவினால் தூங்க ஆரம்பித்து விடும். குழந்தைகளை பெரும்பாலும் தொட்டிலில் தூங்க வைப்பது பாதுகாப்பானது.

Related Posts

Leave a Comment