சாரதா கண்டுபிடித்த உண்மை, வசமாக சூர்யாவிடம் மாட்டிய மீனாட்சி- காற்றுக்கென்ன வேலி

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வண்ணம் ஒளிபரப்பாகி வருகிறது காற்றுக்கென்ன வேலி தொடர். இதில் சூர்யா-வெண்ணிலாவின் காதல் காட்சிகள் எல்லாம் ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது.

சூர்யாவிடம் சிக்கிய மீனாட்சி:

சாரதாவை சூர்யா அம்மா என்று ஏற்றுக்கொள்ள கூடாது என மீனாட்சி இதுவரை பல சூழ்ச்சிகள் செய்துள்ளார். இது எல்லாம் சூர்யாவிற்கு இதுவரை தெரிய வருவதில்லை. வெண்ணிலா, சாரதா குணமாக சில விஷயங்கள் செய்ய அதனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது, சூர்யா அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டார்.

வெண்ணிலா இந்த நிலைமைக்கு மீனாட்சி காரணம் என சாரதா கண்டுபிடித்து அதை வீட்டில் உள்ள அனைவரின் முன்பும் காட்டுகிறார். சூர்யாவிற்கும் பெரியம்மா செய்த விஷயம் தெரியவர அதிர்ச்சியாகி தனது வருத்தத்தை வெளிக்காட்டுகிறார்.

சூர்யாவிற்கு சாரதா மீது நம்பிக்கை வருமா?

தனது அம்மா தவறு செய்துள்ளார், பெரியம்மா தான் கடவுள் என்று நினைத்த சூர்யாவிற்கு இப்போது பெரியம்மா மீது கோபம் இருக்கிறது. எனவே சாரதா மீது இனி அவரது கவனம் திரும்புமா, அம்மா-மகன் காட்சிகள் இனி வருமா என்பது ரசிகர்களின் பெரிய ஏக்கமாக உள்ளது.

தற்போது காற்றுக்கென்ன வேலி புரொமோ ரசிகர்களிடம் வைரலாகிறது.

Related Posts

Leave a Comment