தங்கம் விலை அதிரடி உயர்வு….

by Column Editor

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, சவரனுக்கு 40 ஆயிரத்தை கடந்தது விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் 12ஆவது நாளாக தொடர்ந்து வருவதால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,433 புள்ளிகள் சரிந்து 52,890 ஆக வர்த்தகமாகின. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 430 புள்ளிகள் சரிந்து 15,815 ஆகவும் வர்த்தகமாகின.

இந்நிலையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 85 ரூபாய் உயர்ந்து, ₹5055-க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹40440 க்கு விற்பனையாகிறது. இதனால், திருமணங்களுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1.80 ரூபாய் உயர்ந்து ₹75.20-க்கு விற்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment