2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறிய புதுச்சேரி!

by Column Editor

புதுச்சேரியில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரேநாளில் 5 ஆயிரத்திற்கும் கீழ் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது மத்திய, மாநில அரசுகளை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,15,102 ஆக உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக உள்ளதால், கொரோனா பரவலும் குறைய தொடங்கியுள்ளது. அதேசமயம் இன்னும் சில மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு என்பது தொடர்ந்து பதிவாகி வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 28 நபர்கள் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள நிலையில் , புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.கொரோனா பரவல் முதல் அலை தொடங்கி 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக புதுச்சேரியில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு எவருக்கும் கண்டறியப்படவில்லை என்பது அம்மாநில அரசு மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment