சென்செக்ஸ் 1,491 புள்ளிகள் வீழ்ச்சி….

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,491 புள்ளிகள் வீழ்ந்தது.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடும் வீழ்ச்சி கண்டது, 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல் மற்றும் இன்போசிஸ் ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 862 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,598 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 134 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.241.20 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.51 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,491.06 புள்ளிகள் குறைந்து 52,842.75 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 382.20 புள்ளிகள் சரிவு கண்டு 15,863.15 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment