பாரதி கண்ணம்மா கல்யாண ஃபோட்டோவை தேடும் லட்சுமி.. உண்மை தெரிய வரும் நேரம்!

by Column Editor

பாரதி கண்ணம்மா கல்யாண புகைப்படத்தை லட்சுமி பார்த்து விடுவது போல், சவுந்தர்யா மொத்த உண்மையும் லட்சுமியிடம் சொல்வது போல் செய்திகள் கசிந்தன.

பாரதி கண்ணம்மா சீரியலின் வேகம் வழக்கத்தை விட சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பாரதி குறித்த உண்மையை கண்டுபிடிக்க போலீஸ் வரை சென்று விட்டார் லட்சுமி. இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது வாங்க பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா தொடர் ஒருபக்கம் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் அந்த சீரியலுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறைந்த பாடில்லை. அதனால் இந்த சீரியலின் மவுசு குறையவில்லை. வாரத்திற்கு ஒரு ட்விஸ்ட் நிச்சயம் உண்டு என்ற பாணியில் இயக்குனர் சீரியலை டாப் கியரில் எடுத்து செல்கிறார். போன வாரம் முழுக்க,கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் , டி.ஆர்.பியை எகிற செய்தது. பாரதி பற்றிய உண்மையை கண்ணம்மா சொல்வார் என எதிர்பார்த்த நிலையில் கடைசியில் பாரதி அதை சொல்லவிடாமல் செய்தார். ஆனால் லட்சுமியிடம் கண்ணம்மா பற்றி உயர்வாகவும் பேசி இருந்தார்.

இதோடு லட்சுமி அப்பா பேச்சை பற்றி விட்டு விடுவார் என கண்ணம்மாவும் பாரதியும் நினைக்க, லட்சுமி ஒருபடி மேலே போய் அப்பாவை கண்டுபிடிக்க போலீஸ் வரை சென்று விட்டார். இந்த பக்கம் ஹேமா பாரதிக்கு 2 வது திருமணம் செய்து வைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதைப்பற்றி பாட்டி, அகிலனிடமும் சொல்கிறார். ஹேமாவின் மனதில் வந்திருக்கும் எண்ணம், சவுந்தர்யாவை அதிகம் யோசிக்க வைக்கிறது.

இந்த பக்கம், லட்சுமி, பாரதியை கண்டுப்பிடிக்க தனது தோழியின் அம்மாவிடம் உதவி கேட்கிறார். அவர் வேற யாருமில்லை போலீஸ் இன்ஸ்பெக்டர். அவரிடம் போய் தொலைந்து போன அப்பாவை தேடி தரும்படி லட்சுமி உதவி கேட்க, ஃபோட்டோ இருந்தால் போதும் உங்கள் அப்பாவை தேடி தருகிறேன் என்கிறார் அவர். உடனே ஃபோட்டோவை தேட லட்சுமி முடிவு எடுத்துவிட்டார். அம்மா , அப்பா கல்யாண ஃபோட்டோவை எப்படி தேடுவது என யோசித்துக் கொண்டே ரோட்டில் நடந்து வருகிறார்.

வீட்டில் இருக்கும் கண்ணம்மாவுக்கு லட்சுமி இன்னும் வீடு வந்து சேரவில்லை என்ற கவலை. உடனே குமார் அண்ணாவுடன் சேர்ந்து லட்சுமியை தேடி செல்கிறார். ஆனால் அதற்குள் பாரதி ,லட்சுமியை பார்த்து வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அப்போது லட்சுமி, அம்மா, அப்பா கல்யாண ஃபோட்டோவை தேட போவதாக கூறி பாரதிக்கு ஷாக் கொடுக்கிறார். கல்யாண ஃபோட்டோவில் பாரதி தானே இருப்பார், அதனால் பாரதிக்கு இன்னும் டென்ஷன் அதிகம் ஆகுகிறது. இன்றைய எபிசோடும் முடிகிறது.

ஆனால் ஏற்கெனவே இணையத்தில் பாரதி கண்ணம்மா கல்யாண புகைப்படத்தை லட்சுமி பார்த்து விடுவது போல், சவுந்தர்யா மொத்த உண்மையும் லட்சுமியிடம் சொல்வது போல் செய்திகள் கசிந்தன. இந்த காட்சிகள் அனைத்தும் வரும் எபிசோடுகளில் இடம் பெறும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

Related Posts

Leave a Comment