பாக்கியாவுக்கு கோபி கொடுத்த அதிர்ச்சி.. உண்மையை கண்டுபிடிக்கும் எழில்!

by Column Editor

கோபி பெயருக்கு கோர்ட் பேப்பர் வந்து இருக்கிறது என்று செல்வி அக்கா சொல்ல, பாக்கியா உடனே அதிர்ச்சி ஆகி விடுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்விஸ்டுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனை நாளாக பாக்கியா உட்பட மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வந்த கோபி குறித்த உண்மையை அவரின் கடைசி மகன் எழில்கண்டுபிடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் மற்ற எல்லா சீரியல்களை விடவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. காரணம், திரைக்கதையின் வேகம் தான். முன்னாள் காதலியுடன் நட்பு என்று ஆரம்பித்த கோபியின் உறவு தற்போது திருமணம் வரை வந்து நின்றுள்ளது. அதுவும் 2 பெண்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றுக்கிறார் கோபி. காதலி, மனைவிஎன யாரிடமும் உண்மையாக இல்லாமல், பிள்ளைகளை ஏமாற்றிக் கொண்டு வாழும் கோபி கேரக்டரை திட்டி தீர்க்கவே பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, மற்றொன்று பாக்கியாவின் கேரக்டரும் இந்த சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு உதவுகிறது.

திருமணத்திற்கு பிறகு குடும்பத்திற்காகவே வாழும் பாக்கியாவின் ரோல் நம் வீடுகளில் நாம் தினமும் சந்திக்கும் அம்மாக்களின் மறு உருவம். இதனால் பெண்கள் தங்களுடைய கதை போல் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான புரமோவில் பாக்கியா – கோபியின் விவாகரத்து வழக்கின் முதல் விசாரணை அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது என கோபியின் வக்கீல் ராதிகா மற்றும் கோபியிடம் சொல்கிறார். அதுமட்டுமில்லை இது சம்மந்தமாக கோர்ட் பேப்பர் கூரியர் வரும் என ராதிகா கால் பண்ணி கோபிக்கு சொல்ல, கோபிக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை.

ஆனால் அந்த பேப்பர் வீட்டுக்கு வரும் போது கோபி வீட்டில் இல்லை. ஜெனி கூரியரை வாங்க, கோபி பெயருக்கு கோர்ட் பேப்பர் வந்து இருக்கிறது என்று செல்வி அக்கா சொல்ல, பாக்கியா உடனே அதிர்ச்சி ஆகி விடுகிறார். கோர்ட் பேப்பர் என்றதுக்கே பாக்கியா இப்படி அதிர்ச்சி ஆனால், அது விவாகரத்து பேப்பர் என்று தெரிந்தால் என்ன செய்வாரோ? எழில் அதை படிக்க நினைக்கிறார். ஆனால் அதற்குள் கோபி அதை வாங்கி விடுகிறார். ஆனால் கோபியின் பதற்றத்தை பார்த்து எழிலுக்கு சந்தேகம் வருகிறது. ஏதோ ஒரு உண்மையை அப்பா மறைப்பதாக அவருக்கு சந்தேகம் வருகிறது.

அதுமட்டுமில்லை முதல் விசாரணைக்கு மனைவியை அழைத்து வர வேண்டும் என வக்கீல் அதிர்ச்சி தகவலை சொல்கிறார். கோபி ஷாக்கில் நிற்கிறார். பாக்கியா வந்தால் ராதிகா பார்த்து விடுவார் என்ற பயம் ஒருபக்கம், பாக்கியாவிடம் விவாகரத்துபற்றி பேசவில்லையே என்ற பயம் ஆக மொத்தத்தில் கோபிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படி இருக்கையில் இணையத்தில் வெளியான தகவலின் படி, எழில் இந்த உண்மையை கண்டுபிடித்து விடுவது போல் கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லை இதனால் கோபியும் எழிலும் சண்டை போட்டு கொள்ளும் காட்சிகளும் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.

Related Posts

Leave a Comment