அங்கீகாரம் கொடுத்த சீரியலில் நடிக்க மறுத்த தேவதர்ஷினி – காரணம் என்ன தெரியுமா?

by Column Editor

சின்னத்திரையில் தேவதர்ஷினிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த ரமணி Vs ரமணி சீரியலில் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.

தான் ஏன் சீரியல்களில் நடிப்பதில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார் நடிகை தேவதர்ஷினி.

டி.வி. தொகுப்பாளினியாக இருந்து சீரியல் நடிகையானவர் நடிகை தேவதர்ஷினி. பின்னர் படிப்படியாக சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த ’மர்மதேசம்’ தொடர் தேவதர்ஷினியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. பின்னர் ‘பார்த்திபன் கனவு’ படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ நகைச்சுவை தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார்.

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ’காஞ்சனா’ திரைப்படத்தில் கோவை சரளாவோடு தேவதர்ஷினி இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தார். அவரது இளம் வயது கதாபாத்திரத்தில் தேவதர்ஷினியின் மகள் நியாதி நடித்தார். இந்நிலையில் தற்போது சீரியல்களுக்கு முழுக்குப் போட்டுள்ள அவர் சின்னத்திரைரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

இதற்கிடையே சின்னத்திரையில் தேவதர்ஷினிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த ரமணி Vs ரமணி சீரியலில் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இதில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் அவர் நடிக்கவில்லை. இதற்குக் காரணம் தி பேமிலி மேன் 2 சீரியஸில் தேவதர்ஷினியின் கதாபாத்திரம் அதிக கவனத்தை பெற்றது தானாம். இதனால் நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம் அதன் காரணமாக சீரியலில் நடிப்பதை விட்டுவிட்டாராம்.

Related Posts

Leave a Comment