மீண்டும் வருகிறாள் ‘நாகினி’.. விரைவில் தொடங்கும் புதிய சீசன்

by Column Editor

சூப்பர் ஹிட் சீரியலான நாகினியின் 6வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.

இந்தியாவில் பிரபலமான சீரியல்களில் ஒன்று நாகினி. மனித உருவில் இருக்கும் நாகினி, தனது எதிரிகளை எவ்வாறு பழிவாங்குகிறது என்பதுதான் இந்த சீரியலின் கதைக்களம். இந்தியில் உருவான இந்த சீரியல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த சீரியலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் இதுவரை 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசமான கதைக்களம் அமைக்கப்பட்டு பல்வேறு திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் நாகினி கதாபாத்திரத்தில் மௌனி ராய் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 6வது சீசன் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது. இது குறித்த ப்ரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்த ஆண்டு உலகம் ஒருவிதமாக பாதிக்கப்பட்டு ஆபத்தான அழிவுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த உலகம் மாறியதுபோல் நாகினியும் மாறியது. இந்த உலகத்தை சாபத்திலிருந்து மீட்டெடுக்க மீண்டும் வருகிறாள் நாகினி என்று அந்த ப்ரோமோ உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சீசன் 6-யை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment