ஐஸ்வர்யா சொன்ன ஒரே ஒரு வார்த்தை… தேம்பி தேம்பி அழும் மீனா!

by Column Editor

இதுவரை விசேஷங்கள், கொண்டாட்டங்கள் என களைக்கட்டிய வீட்டுக்குள் இன்று மிகப் பெரிய சண்டை வெடிக்கிறது.

மீனாவும் ஐஸ்வர்யாவும் விடாமல் சண்டை போட மொத்த ஊரும் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டது. இந்த சண்டை இப்படியே தொடர்ந்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என்றாலே ஒற்றுமை என்ற உதாரணம் மாறிவிடும். ஏற்கெனவே இவர்கள் போட்ட சண்டையால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் குடும்பத்தை பற்றி புரளி பேச தொடங்கி விட்டனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நீண்ட் நாட்களுக்கு பின்பு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை விசேஷங்கள், கொண்டாட்டங்கள் என களைக்கட்டிய வீட்டுக்குள் இன்று மிகப் பெரிய சண்டை வெடிக்கிறது. இந்த சண்டையால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மூர்த்தி குடும்பத்தை பற்றி புரளி பேச தொடங்கி விடுகின்றனர். இதற்கு மிக முக்கியமான காரணம் ஐஸ்வர்யவும் மீனாவும் தான். ஏற்கெனவே ஐஸ்வர்யாவின் துடுக்கான பேச்சால் வீட்டில் சின்ன சின்ன சண்டை வந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று சண்டை பெரிதாக வெடித்து விட்டது. தனமும் செய்வதறியாமல் ஷாக்கில் நிற்கிறார்.

அப்படி என்ன நடந்தது இன்றைய எபிசோடில்வாங்க பார்க்கலாம். அம்மா வீட்டுக்கு சென்று இருக்கும் முல்லை, ஹாஸ்பிட்டல் போன விஷயத்தை பற்றி தனது அப்பா, அம்மாவிடம் கூறி வருத்தப்படுகிறார். நாளைக்கு ரிசல்ட் வர போவதை எண்ணி பதற்றமும் கொள்கிறார். அதற்குள் மூர்த்தி வீட்டை காட்டுகிறார்கள் அங்கு கயல் பாப்பாவும், பாண்டியனும் தூங்கி கொண்டிருக்க ஐஸ்வர்யா சத்தமாக ஃபோன் பேசுகிறார். உடனே கயல் பாப்பா எழுந்து அழ தொடங்கி விடுகிறார்.

இதனால் மீனா, ஐஸ்வர்யாவை பார்த்து அறிவு இல்லையா? முண்டம் என திட்ட, ஐஸ்வர்யா பதிலுக்கு கவனிக்கவில்லை சாரி என்கிறார். ஆனால் மீனா கோபத்தில் சரமாரியாக வார்த்தையை விடுகிறார். பதிலுக்கு ஐஸ்வர்யாவும் பேச வார்த்தை சண்டை பெருசாகுகிறது. மீனா, ஐஸ்வர்யா ஓடி போய் கல்யாணம் செய்தவள் என குத்திக் காட்ட, ஐஸ்வர்யா பதிலுக்கு நீங்களும் வீட்டை விட்டு வந்தவர் தான், உங்களால் தான் முல்லை ஜீவா மாமாவை கல்யாணம் செய்ய முடியாமல், கதிரை கல்யாணம் செய்து கொண்டதாக கூறி விடுகிறார். மீனாவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விடுகிறார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம்கேட்டு ஓடி வருகின்றனர். அதற்குள் தனம் அண்ணி சண்டையை முடிக்க பார்க்கிறார். ஆனால் இருவரும் அவரின் பேச்சை கேட்பதாக தெரியவில்லை.

அக்கம் பக்கத்தினர், லட்சுமி அம்மா இல்லாததால் தான் இப்படி சண்டை போட்டு கொள்வதாக குத்தலாக பேசுகின்றனர். உடனே தனம் முகம் மாறி விடுகிறது. அதற்குள் கண்ணன் வீட்டுக்கு வர, மீனா அவரிம் நடந்த சண்டை, ஐஸ்வர்யா பேசியது பற்றி கூறுகிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவை கூப்பிட்டு திட்டுகிறார். ஆனால் பதிலுக்கு ஐஸ்வர்யா மீனா மீது தான் தப்பு என பிடிவாதமாக நிற்கிறார்.

Related Posts

Leave a Comment