தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்தது

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. அமெரிக்க பெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியது, சர்வதேச பங்குச் சந்தைகளின் நிலவரம் சிறப்பாக இருந்தது போன்றவை பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு துணை புரிந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,503 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,851 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 99 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.264.13 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.27 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 113.11 புள்ளிகள் உயர்ந்து 57,901.14 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 27.00 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,248.40 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment