சென்செக்ஸ் 778 புள்ளிகள் வீழ்ச்சி..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 778 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தாண்டியது மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி மற்றும் டாக்டர்ரெட்டீஸ் உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,703 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,643 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 112 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.251.60 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.79 ஆயிரம் கோடி நஷ்டம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 778.38 புள்ளிகள் குறைந்து 55,468.90 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 187.95 புள்ளிகள் சரிவு கண்டு 16,605.95 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment