தொடர்ந்து 3வது நாளாக அடி வாங்கிய பங்கு வர்த்தகம் : சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி

by Column Editor

தொடர்ந்து 3வது வர்த்தக தினமாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது போன்ற காரணங்களால் மேலும் தொடர்ந்து வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எஸ்.பி.ஐ. மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,437 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,855 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.267.47 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.48 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 433.13 புள்ளிகள் குறைந்து 59,919.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 143.60 புள்ளிகள் சரிவு கண்டு 17,873.60 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment