தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள் …

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. சென்செக்ஸ் 463 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் தொடக்கத்தில் பங்கு வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. இருப்பினும் அதன் பிறகு பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், விப்ரோ மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,249 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,249 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 131 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.271.71 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.65 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 463.06 புள்ளிகள் உயர்ந்து 61,112.44 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 149.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,065.00 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment