5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6.17 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 1,130 புள்ளிகள் உயர்ந்தது..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்தத்தில் அளவில் உயர்வு கண்டது. சென்செக்ஸ் 1,130 புள்ளிகள் உயர்ந்தது.

இந்தியா உள்பட உலக நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருவது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டியது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வாரத்தில் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களை தவிர்த்து மற்ற 3 தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.265.95 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 24) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.78 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் .முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.17 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,129.51 புள்ளிகள் உயர்ந்து 58,253.82 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 350.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,354.05 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment