எவனாவது வந்தால் காலை வெட்டிடுவேன்! ஆதங்கத்தில் நந்தினி… அசிங்கப்பட்ட குணசேகரன்

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

ஞானம் கரிகாலனிடம் புதிய தொழில் செய்வதாக சென்று ஏமாந்துள்ளார். இந்நிலையில் கதிரும் தனக்கு வரவேண்டிய மொய் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நந்தினி தான் நல்லா இருக்கும் போது எவனாவது வந்தால் காலை வெட்டிடுவேன் என்று சவால் விட்டுள்ளார்.

இதனிடையே குணசேகரனும் கரிகாலன் பேச்சைக் கேட்டு கோவிலுக்கு வந்து அசிங்கப்பட்டு சென்றுள்ளார். இனி நந்தினி எடுத்து வைக்கப் போகும் அடி என்ன என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment