கார்த்திக்காக போட்டி போட்டு கிப்ட் வாங்கும் தீபா – ரம்யா!

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி குடும்பத்தினர் வீடு மாறி தீபா கையால் பால் காய்ச்சி குடியேறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மீனாட்சியும் மைதிலியும் தீபாவிடம் இந்த வீடு இன்னும் பெருசா தாராளாக இருக்கு என்று பேசுகின்றனர், அடுத்து தீபாவிடம் இன்னைக்கு சாயங்காலம் நடக்க போற பங்ஷனில் கார்த்திக்கு என்ன கிப்ட் கொடுக்க போற என்று கேட்க தீபா இதுவரைக்கும் யோசிக்கல என்று சொல்கிறாள். திடீரென அவளுக்கு ஒரு யோசனை வந்து கடைக்கு கிளம்பி வருகிறாள்.

அதே போல மறுபக்கம் ரம்யா தன்னுடைய அப்பாவிடம் இன்னைக்கு ஒரு பங்ஷனுக்கு போகணும் என்று சொல்ல ரம்யாவிடம் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து சந்தோசப்படுகிறார். பிறகு ஒரு கிப்ட் வாங்கணும் என்று சொல்லி அவளும் கிளம்பி கடைக்கு வருகிறாள். கடைசியாக இருவரும் ஒரே கடைக்கு வர இரண்டு பேரும் சந்தித்து கொள்கின்றனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து ரம்யா உன் ஹஸ்பண்ட்டுக்கு என்ன கிப்ட் வாங்க போற என்று கேட்க தீபா அபிராமி மற்றும் கார்த்தியின் சிறு வயது போட்டோக்களை ஒன்று சேர்த்து ஒரு பிரேம் போட போவதாக சொல்கிறாள்.

பிறகு தீபா ரம்யாவிடம் இதே கேள்வியை கேட்க அவள் ராமன் சீதை போட்டோ ஒன்றை வாங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது… காத்திருக்கும் அதிர்ச்சி திருப்பங்கள் என்ன என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Related Posts

Leave a Comment