திரும்ப திரும்ப தப்பு செய்யும் வெற்றி… அபி உனக்கு இது தேவையாம்மா?

by Column Editor

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் திரைக்கதை மெல்ல மாறி அனைவரின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இடம் பிடித்து இருக்கிறது.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை ரசிகர்களின் பேராதரவுடன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இப்போது சீரியலில் அடுத்த திருப்பமாக இவ்வளவு நாட்களாக ஒற்றுமையாக இருந்த அபிக்கும் அவரின் மாமியாருக்கும் சண்டை இனிதே ஆரம்பமானது.

விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியசீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும். ஈரமான ரோஜாவே புகழ் பவித்ரா இதில் அபிநயா ரோலில் நடிக்கிறார். வெற்றி என்ற நல்லதுக்காக ரவுடிசம் செய்யும் கேரக்டரில் ஆதித்யா சேனல் புகழ் வினோத் பாபு நடிக்கிறார். ஆன் ஸ்கிரீனில் இவர்களின் கெமிஸ்ட்ரி பயங்கரமாக வொர்க்கவுட் ஆகி இப்போது இளைஞர்கள் விரும்பி பார்க்கும் தொடராக மாறியுள்ளது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். வெளியாவதற்கு முன்பே இந்த சீரியலின் அறிமுக புரமோ சர்ச்சையில் சிக்கி இருந்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

அதாவது வெளிநாட்டில் படித்தாலும் தாலி சென்டிமெண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படித்த பெண் அபிநயா, விருப்பமில்லாமல் ரவுடி வெற்றி கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டு அவருடன் வாழ தயாராகுகிறார். மிகவும் பிற்போக்கு தனம் என இந்த சீரியல் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் தற்போது திரைக்கதை மெல்ல மாறி அனைவரின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இடம் பிடித்து இருக்கிறது.

கடந்த வாரம் முழுவது காட்டில் சிக்கிக் கொண்ட வெற்றியும் அபியும் தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ளனர். ஆனால் வீட்டுக்கு வந்த உடனே அவர்களுக்கு புது பிரச்சனை வந்து விட்டது. இத்தனை நாட்களாக அபிநயாவுக்கு சப்போர்ட் செய்து வந்த வெற்றியின் அம்மா இப்போது அவருக்கு எதிரியாகிவிட்டார். காரணம், வெற்றிக்கு எதிராக கோர்டில் அபி சாட்சி சொல்லியது தான். அந்த கோபம் அவர்களுக்கு இன்னும் குறையவில்லை. இதனால் கோபத்தில் தனது மகனிடம் இருந்து மிகப் பெரிய சத்தியத்தை வாங்குகிறார்.

இனிமேல் எப்போதும் அபியை மனைவியாக ஏற்றுக் கொண்டு சேர்ந்து வாழ கூடாது என்று அவர் சத்தியம் வாங்க, வெற்றியும் அம்மா தலையில் வைத்து சத்தியம் செய்கிறார். மொத்த குடும்பமும் ஷாக்கில் நிற்கின்றனர். ஆனால் மனம் தளராத அபி, பதிலுக்கு சவால் விடுகிறார். கூடிய சீக்கிரத்தில் வெற்றியுடன் சேர்ந்து வாழ்வேன் என்கிறார்.

Related Posts

Leave a Comment