வரும் வாரத்தில் எழில் – கயல் திருமண நிச்சயதார்த்த வைபோகம்…!

by Lifestyle Editor

சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று கயல். சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து விடும் கயல், எப்படியோ நர்சிங் படித்து முடித்து மருத்துவமனையில் வேலைக்கு சேர்கிறார். இவரின் அண்ணன் குடியே கதி என பொறுப்பில்லாமல் இருக்க, தங்கையின் மருத்துவ படிப்பு கனவு, தம்பியின் போலீஸ் ஆசை, அண்ணனின் குழந்தையை படிக்க வைப்பது, என ஒட்டு மொத்த குடும்ப சுமையும் கயல் மீது விழுகிறது.

தன்னுடைய தம்பி குடும்பம் கஷ்டப்பட்டாலும், தன்னிடம் கை ஏந்தாமல், சுய கௌரவத்தோடு வாழ்வது பிடிக்காத பெரியப்பா, கயலையும் அவரின் குடும்பத்தையும், பல பிரச்சனைகளில் சிக்க வைக்க திட்டம் போடும் நிலையில், அவை அனைத்தையும் தகர்த்தெறிந்து, கயல் ஒவ்வொரு முறையும் தன்னுடைய குடும்பத்தின் பாசத்தாலும் எழிலின் உதவியுடனும் வெற்றி பெறுகிறார்.

கயலை சிறு வயதில் இருந்தே எழில் காதலித்து வந்தாலும், அவரின் காதலை தன்னுடைய குடும்ப சூழ்நிலையால்… எழிலின் அம்மாவுக்கு பயந்தும் ஏற்றுக்கொள்ள தயங்கிய கயல், தற்போது எழிலின் காதலை ஏற்று கொண்டது மட்டும் இன்றி, எழிலின் அம்மாவையும் தங்களின் காதலுக்கு சம்மதம் சொல்ல வைத்து விட்டார்.

வரும் வாரத்தில், எழில் – கயல் திருமண நிச்சயதார்த்த வைபோகம் களைகட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தருணத்தை, கயல் சீரியல் பார்த்து வரும் பல ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், வெற்றிகரமாக திருமண நிச்சயம் அரங்கேற உள்ளது. எனினும் தர்ம லிங்கத்தால் கயல் நிச்சயத்தில் என்ன பிரச்சனை வெடிக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அரங்கேற உள்ள எழில் – கயல் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியால், சீரியலின் TRP அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment