புதிய சிக்கலில் பாக்கியா… இனியாவுக்கு போன் பண்ணிய சிவகார்த்திகேயன் மேனேஜர்?

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

ஜெனிபர் மற்றும் செழியன் இருவரையும் பாக்கியா ஒன்று சேர்த்து வைத்துள்ளார். கோபியின் ஹொட்டலுக்கும் பாக்கியாவின் சமையல் சென்றுள்ளது.

இந்நிலையில் பழனிச்சாமிக்கு பாக்கியா மீது காதல் ஏற்பட்டுள்ள நிலையில், பழனிச்சாமியின் மருமகன் இனியாவிற்கு ரூட் விட்டுள்ளார்.

இனியாவின் போன் நம்பரை வாங்கிய விமல் சிவகார்த்திகேயனின் மேனேஜர் பேசுகிறேன் என்று இனியாவை கலாய்க்கிறார். அதை நம்பாத இனியா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவேன் என்று மிரட்ட, விமல் எதிரே வந்து ஷாக் கொடுக்கிறார். இதனால் பாக்கியா அடுத்த சிக்கலை மேற்கொள்ள இருக்கின்றார்.

Related Posts

Leave a Comment