தாலியை கழட்டி கொடுத்துட்டு போயிடுவேன்… பரணியின் பேச்சால் அப்செட் ஆன ஷண்முகம் – அண்ணா சீரியல்

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் கவிதாவுக்கு இந்த கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்க இரண்டு குடும்பமும் தட்டு மாற்றி கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வீட்டிற்கு வரும் ஷண்முகம் ரத்தனாவிடம் இனிமே உன் வாழ்க்கையில் அந்த முத்துப்பாண்டி வர மாட்டான், அவனுக்கு வேறு பெண்ணோட கல்யாணம் நடக்க போகிறது என்று சொல்கிறான், உடனே பரணி ரத்னாவுக்கும் இதே மாசத்தில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று சொல்கிறாள். மேலும் இன்னும் 28 நாளில் நான் தாலியை கழட்டி கொடுத்து விட்டு இந்த வீட்டை விட்டு போய்டுவேன் என்று சொல்கிறாள்.

இதை கேட்டு எல்லாரும் சோகமடைகின்றனர். பிறகு ரூமுக்குள் வரும் ஷண்முகம் பரணியிடம் தங்கைகள் இருக்கும் போது நான் போய்டுவேன்னு சொல்லாத, என்னை விட அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க, அவங்க கஸ்டப்படுறதை என்னால் பார்க்க முடியல என்று சொல்கிறான். இதை கேட்டதும் பரணியும் வருத்தமடைகிறாள். இதன் தொடர்ச்சியாக இங்கே கவிதா தன்னுடைய அக்காவுடன் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து எல்லாரது காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள்.

உடனே சௌந்தரபாண்டி பாக்கியத்தை கூப்பிட்டு உன் அண்ணன் பொண்ணுங்க எல்லாரையும் வர சொல்லு எல்லாருக்கும் புடவை எடுத்து கொடுக்கலாம் என்று சொல்ல பாக்கியம் சந்தோசத்துடன் எல்லாரையும் கூப்பிட வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment