சண்முகத்தை லவ் டார்ச்சர் செய்யும் பரணி…

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்துக்கு 1 வாரம் டைம் கொடுக்க ஷண்முகம் நல்ல புருஷனாக நடந்து கொள்கிறானா என்பதை கண்டுபிடிக்க சனியனும் அவனது மனைவியும் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணியும் சண்முகமும் வீட்டிற்கு வர, சனியனின் மனைவி அவர்களை நிறுத்தி ரெண்டு பேரும் ஒண்ணா தான் வீட்டுக்குள் போக வேண்டும், ரூல்ஸ்ல அப்படி தான் இருக்கு என்று சொல்கிறார். இதனால் ஷண்முகம் வேறு வழியில்லாமல் கடுப்பாக செல்ல, ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று புதுசா கல்யாணம் ஆனால் என்னவெல்லாம் செய்வார்களோ அதே போல் செய்ய, ஷண்முகம் தங்கைகளை பார்த்து முறைக்கிறான்.

அடுத்து பரணி சண்முகத்தை வெறுப்பேற்றி கொண்டே இருக்கிறாள், லவ் டார்ச்சர் செய்து சண்முகத்தை லவ்வர் பாயாக மாற்ற முயற்சி செய்கிறாள். இதனையடுத்து ஷண்முகம் கடைக்கு கிளம்பி செல்கிறான். திரும்பி வரும் போது வெறும் கையோடு வீட்டிற்கு வர, சனியன் மல்லிகை பூ எங்கே என்று கேட்கிறான். எப்பவும் இப்படி தான் வருவேன் என்று ஷண்முகம் சொல்ல, மல்லி பூவுடன் தான் வரணும், அதான் ரூல்ஸ், இல்லனா இப்பவே பஞ்சாயத்துக்கு தெரியப்படுத்தி விடுவேன் என்று சொல்கிறார்.

இதனால் இன்னும் கடுப்பாகும் ஷண்முகம் சனியனை போட்டு அடிக்கிறான். சனியன் நான் சொல்லல, நோட்ல ரூல்ஸ் இருக்கு என்று அழ, ஷண்முகம் மல்லி பூ வாங்கி வர கிளம்ப, பரணி எனக்கு அல்வாவும் வேண்டும் என்று சொல்ல, கோபத்துடன் வரும் ஷண்முகம் இரண்டையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment