மகளா ? இரண்டாம் மனைவியா ! பாக்கியலட்சுமி …

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி.

பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கோபி தன்னை ஒதுக்கி குடும்பத்தை பழிவாங்க அவர்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே ராதிகாவுடம் குடுத்தனம் நடத்தி வருகிறார்.

இடையில் இனியா செய்த தவறை தண்டித்த பாட்டி, அம்மாவிடம் கோபித்துக்கொண்டு அப்பாவிடமே சென்றுவிட்டார் மகள்.

பேத்தி இருக்கும் இடம் தான் என் இடம் என்று தாத்தாவும் இனியா இருக்கும் கோபி வீட்டுக்கு சென்றுவிடுகிறார். தாத்தா செய்யும் அட்ராசிட்டியால் ராதிகா – கோபிக்கு இடையில் சண்டை ஆரம்பித்தும் வருகிறது.

இந்நிலையில், ராதிகா கொடுத்த காபியை ஏன் குடிக்கவில்லை என்று கேட்டதற்கு இனியா கோபமடைகிறார். உங்களிடம் பேசப்பிடிக்கவில்லை என்று ஆரம்பித்து கோபியிடம் நான் முக்கியமா? இவங்க முக்கியமா? என்று புது சண்டையை ஆரம்பித்துவிட்டுள்ளார். கோபிக்கு இனியா வெச்ச புது ஆப்பு ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவில்லை என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment