ஒரு வழியா விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் அது நடந்துடுச்சு.. ரசிகர்கள் ஹாப்பி!

by Column Editor

ஐஸ்வர்யா – கார்த்திக் திருமணம் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடந்து முடிந்து விட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்வதால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

சீரியலில் முத்துராசு மரணத்திற்கு பிறகு மொத்த கதையும் வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கிவிட்டது. வீட்டையும் சொத்தையும் இழந்த நாச்சியார் அம்மாவின் குடும்பம் இப்போது மாயனுடன் இருக்கின்றனர். இதில் எல்லோருமே மாயனை பற்றி புரிந்து கொண்டனர். ஆனால் சரண்யா மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறார். கொஞ்சம் நாளாக மாறன், மாயனுக்கும் நாச்சியார் குடும்பத்திற்கு சில பிரச்சனைகளை தந்து வந்தார். இப்போது அதுவும் இல்லை. ஆனால் அதைவிட மிகப் பெரிய பிரச்சனை இப்போது மொத்த குடும்பத்திற்கும் காத்துக் கொண்டிருக்கிறது.

முத்துராசு கொலை குறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி, கார்த்திக் இப்போது ஐஸ்வர்யாவை காதலிக்கிறார். அனைவரின் சம்மதத்துடனும் இவர்களின் கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் முத்துராசின் அம்மா வடிவுக்கும், மாசானிக்கும் இதில் துளியும் விருப்பமில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த, கார்த்திக்கின் அம்மா – அப்பாவை சந்தித்து 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்க சொல்கிறார். அவர்களும் அப்படியே கேட்க, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் நிற்கிறது. ஆனால் மாயன், 100 சவரன் நகை போட்டு தனது தங்கையை கட்டி கொடுப்பதாக சத்தியம் செய்கிறார்.

அதற்கு, வடிவு வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவின் நகையை திருடி விட்டார். இதை கார்த்திக்கும் பார்த்து விட்டார். இப்படி இருக்கையில் கல்யாணம் நடக்குமா? நடக்காதா? நகை விஷயம் என்னவாகும்? வடிவு கல்யாணத்தை நிறுத்து விடுவாரா? என பல கேள்விகளுடன் சீரியல் எபிசோடு பயணித்து வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா – கார்த்திக் திருமணம் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடந்து முடிந்து விட்டது. இதை உறுதிசெய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

வரும் சீரியல் எபிசோடுகளில் இந்த கல்யாண நிகழ்வு ஒளிப்பரப்படும் என தெரிகிறது. ஏற்கனெவே முத்துராசும், கத்தியும் இந்த சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக பல தகவல்கள்இணையத்தில் உலா வர, தற்போது ஐஸ்வர்யா – கார்த்திக் கல்யாணமும் முடிந்து விட்டது. இதன் பின்பு முத்துராசு என்ட்ரி கொடுத்து அவர்களை பிரிக்க நினைக்கவும் வாய்ப்பு உண்டு . ஆனால் உண்மையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts

Leave a Comment