வெளியே போ அம்மா… பல்டி அடித்த தர்ஷினி! அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பதும் தெரியாமல் உள்ளதால் அவரது மகள் வெண்பாவை ஈஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தர்ஷினி குணசேகரன் பக்கம் சாய்ந்துள்ள நிலையில், அவரது அம்மா ஈஸ்வரியை வெளியே போகக் கூறியுள்ளார்.

இதனால் பார்வையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தர்ஷினி தனது தந்தையுடன் சேர்ந்து அவரது திட்டத்தை தெரிந்து கொள்வதற்கு இவ்வாறு செய்கின்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment