ஆசையை தூண்டிவிட்ட அபிராமி… சொத்துக்காக மல்லுக்கட்டபோகும் ரியா & ஐஸ்வர்யா

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி வீட்டுக்கு வர தீபா ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கும் நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது அபிராமி தீபாவிடம் நீ இந்த குடும்பத்துக்காக செய்த தியாகத்தை எல்லாம் நான் புரிஞ்சுகிட்டேன். நானே தேடி இருந்தா கூட இந்த மாதிரி ஒரு பொண்ணு கார்த்திக்கு கட்டி வச்சிருக்க முடியாது அவனுக்கு ஏத்தவன் நீ தான் என்று சொல்லி தீபாவை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறாள்.

பிறகு மீனாட்சி பார்த்து உனக்குத்தான் என்ன சொல்றதுன்னு தெரியல என்று வருத்தப்படுகிறார். என்னைக்கு இருந்தாலும் நீ தான் என் மருமக என்று சொல்ல மீனாட்சி நீங்கதான் என்னுடைய அத்தை என்று சொல்கிறாள். அதனைத் தொடர்ந்து அபிராமி சொத்தை பிரிக்கப் போவதாக சொல்கிறாள். பிறகு ஆனந்த் மற்றும் ரியா காஸ்மெடிக் கம்பெனி, இந்த வீடு எல்லாம் நமக்கு வரணும் என பேசிக் கொள்கின்றனர்.

இதையடுத்து அருண் ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்ளும்போது ஐஸ்வர்யா நமக்கு சின்ன சின்ன கம்பெனி போதும், ஆனா இந்த வீட்டை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது அதுதான் நம்முடைய அடையாளம் நீங்க கேக்கலனாலும் நான் இந்த வீட்ட கேட்பேன் என்று சொல்கிறாள். பிறகு கார்த்திக் சொத்து பிரிப்பது பற்றி பேசி வருத்தப்படுகிறார்.

தீபா யார் என்னை கேட்டாலும் சரி அத்தையும் மாமாவையும் நாம விட்டுக் கொடுக்கக் கூடாது அவங்க நம்பக் கூட தான் இருக்கணும் என்று சொல்கிறாள். மறுநாள் லாயர் வீட்டுக்கு வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment