‘பாண்டியன் ஸ்டோர் 2’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ரிஹானா..

by Lifestyle Editor

சன் டிவி சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் ரிஹானா. சீரியல் பிரபலங்கள் சர்ச்சை பற்றி வான்டடாக வாயை விட்டு வாங்கி கட்டி கொண்டவர் என்றும் இவரை கூறலாம். இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில், ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் முடிந்த கையோடு, துவங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர் 2′ சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.

அப்பா – பிள்ளைகள் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், கடந்தாண்டு அக்டோபர் 2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இயக்குனர் ஐ டேவிட் இயக்கி வரும் இந்த சீரியலில், ஸ்டாலின் முத்து, நிரோஷா ராஜ்குமார், மனோகரன், வி ஜே கதிர்வேல் கந்தசாமி, வசந்த் வஷி, ஆகாஷ் பிரேம்குமார், ஹேமா, ஷாலினி, சரண்யா துரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில், நடிகை ரிஹானா மாரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுவரை இவர் நடித்த கதாபாத்திரங்களை விட இந்த ரோல் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரிஹானா அறிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் தொடர்ந்து ஏன் இந்த சீரியலில் இருந்து விளக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

அதாவது ரிஹானா தன்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். கதைப்படி இந்த சீரியலில் அவரது கேரக்டர் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதால், பிரேக் எடுக்க முடியாத காரணத்தால்… தொடரில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவாகி விட்டதாகவும், உங்கள் எல்லோரையும் போல் நானும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை மிகவும் மிஸ் செய்வேன் என கூறியிருக்கிறார்.

ரிஹானாவுக்கு பதிலாக, தற்போது சன் டிவியில் இனியா தொடரில் நடித்து வரும் மாதவி, புதிய மாரியாக கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment