ரவுடிகளிடமிருந்து தப்பித்த தர்ஷினி…எதிர்நீச்சல் சீரியல்

by Lifestyle Editor

பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தற்போதுள்ள கதைக்களத்தில் தர்ஷினி பெற்ற தந்தையால் கடத்தப்பட்டு ரவுடிகள் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தர்ஷினியை தாய் கடத்தியதாக கூறி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. தர்ஷினியை கடத்தி வைத்திருப்பவர்களிடமிருந்து அவர் தப்பித்துள்ளார்.ஜனனியும் ஒருவழியாக தர்ஷினியை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். ஆனால் அங்கு தர்ஷினி இல்லை.. தர்ஷினி தப்பித்து வரும் வழியில் பாறை ஒன்றில் மயக்க நிலையில் காணப்படுகின்றார்.

Related Posts

Leave a Comment