பாக்யா-கோபி இப்படி மாறிட்டாங்களே

by Column Editor

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் இதுவரை பாக்யா மற்றும் கோபி இருவரும் தொடர்ந்து மோதல். போக்கில் தான் இருந்தனர்.

பாக்யாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என கோபி பல்வேறு விஷயங்களை செய்து வந்தார். ஆனால் பல முறை நோஸ்கட் வாங்கி இருக்கிறார்.

அடுத்த வார ப்ரோமோ

இந்நிலையில் தற்போது அடுத்தவார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் பாக்யா கோபிக்கு நன்றி கூறி இருக்கிறார். எழில் திருமண வாழ்க்கையில் வந்த சிக்கலை எப்படி சமாளிப்பது என தெரியாமல் நின்றபோது, கோபி தான் தலையிட்டு சமாளித்தார்.

அதற்காக தான் பாக்யா கோபிக்கு நன்றி கூறி இருக்கிறார். அவர்கள் இப்படி பேசுவது ராதிகாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது. இப்படி மாறிவிட்டார்களே என ரசிகர்களே சர்ப்ரைஸ் ஆகி இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment