சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு வந்த சந்தேகம்..அண்ணா சீரியல்

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மடியில் படுத்து கொண்டு அம்மாவாக நினைத்து சத்தியம் கேட்க பரணியும் சத்தியம் செய்ய வந்த நேரத்தில் கையை கீழே போட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, மறுநாள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் ஷண்முகம் கத்திக்குத்து நடந்த இடத்தை தொட்டு பார்த்து வலியை உணர்ந்து கையில் வேல் எடுத்து கொண்டு முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டியை குத்த கிளம்புகிறான், எல்லோரும் தூங்கி கொண்டிருக்க ஷண்முகம் யாருக்கும் தெரியாமல் வெளியே வரும் போது கனியின் காலை மிதிக்க அவள் கத்த எல்லாரும் எழுந்து கொள்கின்றனர்.

இதனை தொடர்ந்து ஷண்முகம் வேலுடன் இருப்பதை பார்த்து எல்லாருக்கும் சந்தேகம் வர ஷண்முகம் சும்மா வெளிய போயிட்டு வரேன் என்று சொல்கிறான். பரணி நீ எங்க போறேன்னு தெரியும் அதெல்லாம் போக வேண்டாம் என்று சொல்ல என்ன உன் அண்ணனை காப்பாற்ற பாக்குறியா என்று கேட்க பரணியும் ஆமாம் என்று சொல்லி வேலை பிடிங்கி கொண்டு உள்ளே சென்று விட மற்றவர்கள் அவ உன்மேல நிறைய பாசம் வச்சிருக்கா என்று சொல்கின்றனர்.

இருந்தாலும் ஷண்முகம் ஆவேசமாக பேசி கொண்டிருக்க இசக்கி நீ வீரனு எங்களுக்கு தெரியும் முதல்ல இந்த டீயை குடி என ஆப் செய்து விடுகிறாள். அடுத்ததாக சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி, பாண்டியம்மா ஆகியோர் ஒன்று பெண்ணை பார்த்து கல்யாணம் முடிவு செய்கின்றனர். பாண்டியம்மா எப்படியாவது அந்த சண்முகத்தை நம்ப வைத்து குடும்பத்தோடு கல்யாணத்துக்கு வர வைக்கணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதுக்கு பாக்கியத்தை நம்ப வைத்தாள் போதும் என சொல்லி வீட்டிற்கு வந்து தனது கழுத்தில் கத்தியை வைத்து முத்துபாண்டியை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க பாக்கியமும் நம்பி விடுகிறாள்.

உடனே பாக்கியம் வைகுண்டம் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை சொல்ல எல்லாரும் சந்தோசப்பட ஷ்ணமுகத்திற்கு மட்டும் ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது, இதே நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணி மூன்று குழந்தைகளுடன் இருக்கும் போது யாரோ ஒருவர் ஒரு குழந்தையை தூக்கிட்டு போற மாதிரி கனவு கண்டு அலண்டு எழுகிறாள். அதே போல் ஷண்முகம் தூங்கி கொண்டிருக்கும் போது சூடாமணி கனவில் வந்து ஷண்முகம் அம்மா வந்திருக்கேன் கதவை திறடா என்று சொல்வது போல் இருக்க ஓடி வந்து கதவை திறக்க யாரும் இல்லாமல் இருக்கின்றனர்.

வீட்ல எல்லாரும் என்னாச்சு என்று கேட்க ஷண்முகம் அனைவரையும் சமாளித்து விட்டு சூடாமணியை பார்க்க வர அவள் மூன்று தங்கச்சிகளையும் பத்திரமாக பாத்துக்க எனக்கு என்னமோ தப்பா தோணுது என்று சொல்ல வீட்டிற்கு வரும் ஷண்முகம் ஸ்கூல், காலேஜ் என வெளியே கிளம்பும் தங்கைகளை எங்கேயும் போக கூடாது என தடுத்து நிறுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Related Posts

Leave a Comment