அப்பாவால் கடத்தப்பட்ட உண்மையை அறிந்த தர்ஷினி..

by Lifestyle Editor

எதிர்நீச்சல் சீரியல் நாடகத்தில் குணசேகரனை விட்டு கதிர், ஞானம், சக்தி மூவரும் தனி டீம் அமைத்து விடுகின்றனர். இந்த மாதரியான சமயத்தில் தாராவுக்கு பீஸ் கட்ட முடியாமல் இருப்பதாய் பார்த்து பிசினஸ் துவங்குவதற்காக தனது மாமியார் கொடுத்த பணத்தில் இருந்து ஸ்கூல் பீஸுக்கு தேவையானவற்றை கொடுக்கிறான் ஞானம். ஆனால் நந்தினி அதனை வாங்க வேண்டாம் என சொல்லி விடுகிறாள். கதிரும், என் பொண்ணுக்கு நான் செய்யுறது தான் சரியாய் இருக்கும் என்கிறான்.

இதனால் ஞானம் அழுது புலம்ப ஆரம்பிக்கிறான். என் தம்பிக்காக நான் பணம் கொடுக்க கூடாதா? நான் அடுத்த குணசேகரனா மாறிடுவேன் நினைக்குறாங்க. நான் அப்படியா என ரொம்ப வருத்தமாக பேசி புலம்ப ஆரம்பிக்கிறான். கதிர் வந்து அவனிடம், நான் ஏதாவது தப்பு பண்ணா, அடிச்சு திருத்து அண்ணே. எதுக்காக இப்படி அழுகுற என சொல்லி சமாதானப்படுத்துகிறான்.

இதனிடையில் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் ஆளிடம் போன் பண்ணி பேசுகிறான் குணசேகரன். சொந்த மகளையே கடத்தி வைத்து இத்தனை நாட்களாக நாடகம் நடத்தி இருக்கிறான். குத்து சண்டை போடுறேன். அங்க போறேன். இங்க போறேன்னு சொல்லிட்டு இருக்கா. அப்போ நம்ம ஆம்பளைங்க எல்லாம் எதுக்காக இருக்கோம். நீ ஒழுங்க என் பொண்ணை பார்த்துக்க.

இதுல ஏதாவது தப்பு நடந்துச்சு, உன்னை சும்மா விட மாட்டேன். போலீஸ் கிட்ட உன்னை கை காமிச்சுட்டு, நான் போயிருவேன். அப்பறம் உனக்கு பணமும் கிடைக்காது. தொழிலும் போயிடும் என சொல்லி எச்சரிக்கிறான். இதனால் அப்செட்டான அந்த கடத்தல்காரன் முழுக்க சரக்கை போட்டு தர்ஷினியை சுட போகிறான். அங்குள்ள அனைவரும் அவனை தடுக்கின்றனர். இதனால் இன்னும் இரண்டு நாள் தான் உனக்கு டைம் என சொல்லிவிட்டு அங்கிருந்து போகிறான்.

இதனையடுத்து கரிகாலன், ஜான்சி ராணி இருவரையும் தன்னுடைய இடத்தில் அழைத்து வைத்து பேசுகிறான் குணசேகரன். நீங்க இங்கயே தங்குங்க. நான் கூப்பிடும் போது, ஏன் என்னன்னு கேட்காம கிளம்பி வாங்க. உங்களுக்கு என செய்யணுமோ அதை செய்றேன் என சொல்கிறான். இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோவில், கடத்தல்காரனுக்கு குணசேகரன் போன் போட, அவன் போதையில் இருப்பதால் தர்ஷினி கைக்கு போன் கிடைக்கிறது.

இதனால் போனை அட்டென்ட் பண்ணி அவள் காதில் வைக்க எதிரில் யார் இருக்கிறார் என்பது தெரியாமல் குணசேகரன் பேச ஆரம்பிக்கிறான். பிள்ளைக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். நானே வந்து மகளை கூப்பிட்டுகிறேன் என பேசுகிறான். இந்தப்பக்கம் ரேணுகா வந்ததும் அவளிடம் குழந்தைக்கு பீஸ் கட்ட பணம் தானே கொடுத்தேன். இதுக்காக அடுத்த குணசேகரனா மாறிடுவேன் சொன்ன கஷ்டமா இருக்குல என சொல்லி அழுகிறான் ஞானம். இப்படியாக ப்ரோமோ வீடியோ நிறைவடைந்துள்ளது.

Related Posts

Leave a Comment