குணசேகரின் சூழ்ச்சியால் சிறைக்கு அனுப்பப்பட்ட ஈஸ்வரி…

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர். ஆனாலும் சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதுடன், குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

கதிர் மட்டுமின்றி ஞானமும் குணசேகரனை எதிர்த்து நிற்கும் நிலையில், வீட்டில் உள்ள பெண்கள் குணசேகரன் சதியால் காவல்நிலையத்தில் இருக்கின்றனர்.

நந்தினியை பார்த்து கதிர் துடிதுடித்துப் போன காட்சிகள் வேற லெவல் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் குடும்ப பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் குணசேகரன் செய்த சதியால் ஈஸ்வரி சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மற்ற பெண்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், குணசேகரன் அனைவரிடமும் சவால் விட்டுள்ளார்.

இதனிடையே தர்ஷினியின் நிலை என்ன என்பது தெரியாமல் பார்வையாளர்கள் குழம்பி வருகின்றனர்.தற்போது அந்த டிஆர்பி-யை கதிரை வைத்து பிரபல ரிவி அடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கதிர் தனது அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளார்.

Related Posts

Leave a Comment