நந்தினியை நினைத்து வீட்டில் கொந்தளிக்கும் கதிர்! நீதிமன்றத்தில் நிகழப் போவது என்ன

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர். ஆனாலும் சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதுடன், குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

தற்போது அந்த டிஆர்பி-யை கதிரை வைத்து பிரபல ரிவி அடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கதிர் தனது அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளார்.

கதிர் மட்டுமின்றி ஞானமும் குணசேகரனை எதிர்த்து நிற்கும் நிலையில், வீட்டில் உள்ள பெண்கள் குணசேகரன் சதியால் காவல்நிலையத்தில் இருக்கின்றனர்.

அதிலும் நந்தினியின் கோலத்தை பார்த்த கதிர் துடிதுடித்துப் போயுள்ளார். அடுத்ததாக நீதிமன்றத்தில் என்ன நடக்க இருக்கின்றது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment