கர்ப்பமாக இருக்கும் தகவலை கியூட்டாக அறிவித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

by Lifestyle Editor

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா தமிழ் செல்வி. அந்த சீரியலில் வினோதினி என்கிற கதாபாத்திரத்தில் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதை கொள்ளைகொண்ட ரித்திகா, அடுத்ததாக சிவா மனசுல சக்தி, சன் டிவியில் சாக்லேட், திருமகள் போன்ற தொடர்களில் நடித்தார்.

இதையடுத்து விஜய் டிவியில் ஆரம்பமான பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்கிற கேரக்டரில் நடிக்க கமிட் ஆனார் ரித்திகா. அந்த சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடித்த இவர், அதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கினார். அந்நிகழ்ச்சியின் 2-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார் ரித்திகா.

அதன்பின்னர் பாக்கியலட்சுமி சீரியல் படிப்படியாக பிக் அப் ஆகி டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து கரம்பிடித்தார் ரித்திகா. இவர்களது திருமணம் கேரளாவில் சிம்பிளாக நடைபெற்றாலும் சென்னையில் கிராண்ட் ஆக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

திருமணத்துக்கு பின்னரும் சிரியலில் நடித்து வந்த ரித்திகா தமிழ் செல்வி, கடந்தாண்டு திடீரென அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ரித்திகா. தற்போது ரித்திகாவுக்கு பதிலாக அம்ரிதா கேரக்டரில் அக்‌ஷிதா நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை கியூட்டாக அறிவித்து இருக்கிறார் ரித்திகா. பிரெக்னன்சி கிட் மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை சுற்றி வைத்து கம்மிங் சூன் என எழுதி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் ரித்திகா. அவருக்கு சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment