அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை..

by Lifestyle Editor

அண்ணன்-தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல் அண்ணா.

மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் நாயகன்-நாயகியாக நடிக்க நமக்கு பரீட்சயமான சில முகங்களும் நடிக்கிறார்கள். கடந்த வருடம் மே மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடரை துர்கா சரவணன் இயக்கி வருகிறார்.

200க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கும் இந்த தொடர் குறித்து ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது.

அதுஎன்னவென்றால் அண்ணா சீரியலில் இருந்து நடிகை தர்சு சுந்தரம் வெளியேறிவிட்டாராம்.

அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பதனால் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதில் அந்த வேடத்தில் யார் நடிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.

Related Posts

Leave a Comment