உண்மையை உடைத்த உமையாள்… நின்றுபோன திருமணம்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் அவரது மகள் வெண்பா ஏக்கத்தில் காணப்படுகின்றார்.

தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்த நிலையில், தற்போது தடைபட்டுள்ளது. இதற்கு காரணம் கதிர் மாப்பிள்ளையை தூக்கியுள்ளார்.

இவ்வாறு பரபரப்பினை அடுத்தடுத்து கொடுத்து வரும் குறித்த சீரியலில் ஜீவானந்தம் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment