மீண்டும் காதல் திருமணம் செய்ய போகும் ரச்சிதா

by Lifestyle Editor

கன்னட சீரியல் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான ரச்சிதா, பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுமானார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்த தினேஷ் மீது காதல் ஏற்பட்டு இரு வீட்டிலும் சம்மதித்து திருமணம் நடந்து முடிந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக தினேசுக்கும் ரச்சிதாலிற்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் தினேஷ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ரச்சிதா.

தினேஷ் மீண்டும் ரச்சிதாவுன் வாழ ஆசைப்படுவதாக சமீபத்தில் பிக் பாஸ் 7 நிகழ்சியில் கூறியிருந்தார்.

ஆனால் ரச்சிதா தினேஷ் உடன் வாழ வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார், அந்த வகையில் ரச்சிதா கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்தப்படத்தின் இயக்குனருடன் ரச்சிதாவுக்கு காதல் ஏற்பட்டு உள்ளதாம். ரச்சிதா கன்னட பட இயக்குனரை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை ரச்சிதா நேரடியாக கூறும் வரை நம்ப முடியாது, ரச்சிதாக்கும் இயக்குனரின் திருமணம் பற்றிய தகவல் கடந்த ஆண்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment